தேடு

Sunday, June 26, 2011

இராமகிருஷ்ணர் பொன் மொழிகள்

                         வெண்ணெய் எடுக்க சூரிய உதயத்திற்கு முன்பாக கடைய வேண்டும். பகலில் கடைந்தால் நன்றாகச் சேராது. அதுபோல் சிறுவயதிலேயே ஆன்மிக நெறியில் நின்று மனதைக் கடவுளிடம் செலுத்தினால் தான் இறைக்காட்சி கிடைக்கும்.

                           கடவுளைத் தேடுபவன் அவரை அடைகிறான், செல்வத்தைத் தேடுபவன் அவற்றை அடைகிறான். நீ எதைத் தேடுகிறாயோ அதையே அடைவாய்.

                        குருவின் சக்தியின்மீது திடமான நம்பிக்கை கொண்ட ஒரு சிஷ்யன், குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆற்றின் மீது நடந்து போனான். இதைக் கண்ட குரு 'என் பெயருக்கே இவ்வளவு மகிமை இருக்கிறதென்றால், எனக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும். இது எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே என்று நினைத்தபடியே, அவரும் தண்ணீரின் மீது நடக்க ஆரம்பித்தார். ஆனால், கால் வைத்தவுடன் மூழ்கிவிட்டார். நம்பிக்கையால் அபூர்வமான காரியங்களைச் சாதிக்கலாம். ஆனால், தற்பெருமை அழிவைத் தரும்.

                    மனைவி, மக்கள், பெற்றோர் அனைவருடனும் சேர்ந்து குடும்பமாக வாழுங்கள். ஆனால், உள்ளத்தை மட்டும் கடவுளிடம் இருத்துங்கள். 

           குடிகாரர்கள், குழந்தைகள் இவர்கள் வாய் மூலமாகவும் சிற்சில வேளைகளில் தெய்வீக விஷயங்கள் வெளிவருவதுண்டு.

                    புண்ணிய பாவத்தின் உயர்வு தாழ்வு என்பது மனத்தின் நிலையைப் பொறுத்து அமைவதாகும்.

ஆண்டவன்-கண்ணதாசன்

பிறப்பில் வருவது யாதெனக்கேட்டேன்
பிறந்து பார் என இறைவன் பணித்தான்

இறப்பில் வருவது யாதெனக்கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்

வாழ்வில் வருவது யாதெனக்கேட்டேன்
வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்

அனுபவித்தேதான் வாழ்வது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்.

- கண்ணதாசன்

Friday, June 17, 2011

உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்-ஒஷோ

           உங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டால் அங்கு அச்சம் இல்லை, முடியுமா, முடியாதா, நடக்குமா, நடக்காதா என்ற கேள்வியும் இல்லை. 



Thursday, June 16, 2011

உண்ணாநோன்பு (விரதம்)-ஒஷோ

          உண்ணாவிரதம்- இதைப் ப்ற்றி நாம் நினைத்துக் கொண்டிருப்பது சாப்பிடாமல் இருப்பது. உண்மையில் சாப்பிடாமல் இருப்பதுதான் உண்ணாவிரதமா? அது நம் உடலுக்கு நல்லதா? சரி ஒஷோ என்ன சொல்கிறார் என்ப் பார்ப்போம்.   
        


எது வேண்டும் நமக்கு---ஒஷோ


Wednesday, June 15, 2011

நான் யார்---ரமணர்




           நான் யார்? அற்புதமான கேள்வி. நானும் தேடிக்கொண்டிருக்கிறேன், அதை உணரவுதை தவிர வேற வழி இல்லை. இதைப் பற்றி ரமணர் சொல்கிறார் (நான் யார்?  ரமண பகவான் அருள் மொழி, ஸ்ரீ ரமணாச்சர்மம்).............

           


              

Thursday, June 9, 2011

தியானம்--ஒஷோ

ஒஷோவின் அற்புதத்திலும் அற்புதம் புத்தகத்தில் இருந்து,நீங்களும் படியுங்கள்

  

 
            ¾¢Â¡Éõ ±ýÀÐ ¸ñ¸¨Ç ãÊ즸¡ûÅÐ À¢Ã¾¢ÀÄ¢ôÒ¸¨Çô À¡÷측Áø þÕôÀÐ. ¯í¸¨Ç§Â À¡÷ôÀÐ þøÄ¡Å¢ð¼¡ø ¿¡û ÓØÅÐõ ¿£í¸û ÁüÈÅ÷¸Ù¼ý ¾¡ý ¦¾¡¼÷Ò ¦¸¡ñÊÕôÀ£÷¸û
            ÁüÈÅ÷¸û ¸ñ¸û À¢Ã¾¢ÀÄ¢ôÀо¡ý ¯í¸¨Ç ¸Å÷¸¢ÈÐ, ¿øÄŦÃýÚ ¦º¡ýÉ¡ø ÁÉ¿¢¨È× ²üôÀθ¢ÈÐ, §Á¡ºõ ±ýÈ¡ø ¯í¸ÙìÌõ «ôÀʧ §¾¡ýÚ¸¢ÈÐ. ±ø§Ä¡Õõ ¯í¸ÙìÌ §¿¡ö ±ýÈ¡ø, §¿¡ö ùó¾Ð §À¡Ä§Å §¾¡ýÚ¸¢ÈÐ.¯í¸û «¨¼Â¡Çõ ÁüÈÅ÷¸Ç¡ø ¯ñ¼¡¸¢ÈÐ.

  “ÁüÈÅ÷¸Ù¼ý Å¡úÄ¡õ, ¬É¡ø «Å÷¸Ç¡ø Å¢ÃÂÁ¡¸¢Å¢¼¡¾£÷¸û”

Wednesday, June 1, 2011

விதி என்பது உண்டா?

         எனக்கு பல வருடங்களாக ஒரு சந்தேகம் என் மனதை உருத்திக்கொண்டே இருந்தது விதி என்பது உண்மையில் இருக்கிறதா? நான் எதுசெய்தாலும் அதை விதி என்று சொல்லவா அல்லது என் முயற்சியா? நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம் வாழ்கையில் மிகப்பெரும் மாற்றத்தைக் ஏற்படுத்தும் இல்லையா? அந்த ஒரு முடிவு மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கலாம் அல்லது அதற்கு நேர்மாறாக இருக்கலாம்?



        அப்படியென்றால் அந்த முடிவை எடுத்தது யார்? இது என்ன கேள்வி நாம் தான், அப்படியென்றால் நம்மால் ஏன் எப்பொழுதும் நல்ல முடிவை எடுப்பதில்லை? நாம் நல்லது என நினைபது சில சமயம் தவறாக முடிகிறது அல்லது சரியாக இருக்கிறது, இது முரண்பாடாக உள்ளதே? என்னுள் பல எண்ணங்கள் உருவாகின்றன, அதில், நான் குறிப்பிட்டதை தேர்ந்தெடுக்கிறேன் அப்படியென்றால் நான் இதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்   என்பது முன்பே தீர்மானிக்கப் பட்டுவிட்டதா?  கேள்விமேல் கேள்விகள்......பதில் என்ன?


           விதியையும் மதியையும் பற்றி நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்இப்படிச் சொல்வார்- “சீட்டாட்டதின் போது கலைக்கப்பட்ட சீட்டுகள் நால்வருக்கும் விழுகிறதே, அதில் ஒருவரை எடுத்துக் கொண்டால் அவருக்கு விழுந்திருக்கும் சீட்டுகளை விதிப்படி விழுந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் அந்தச் சீட்டுக்களை வைத்துக் கொண்டு எப்படி ஆடுகிறாரோ அதை அவரது மதியால் ஆடுகிறார் என்று கொள்ளுங்கள்” என்பாராம். அதாவது, நமது சக்திக்கும் புறம்பாய் அமைவது விதி, சக்திக்கு உட்பட்டு நாம் செய்யும் செயல்களை நாம் நமது மதியால் கட்டுப்படுத்தலாம் என்பதை இக்கருத்து அறிவிக்கிறது. ஆகவே விதியை நொந்து ஒரு பயனும் இல்லை, ஆனால் நமது மதியை உபயோகப்படுத்தாது நாம் இருப்பது அறிவுள்ள செயல் ஆகாது. ஆனால் நாம் செய்யும் செயலினால் நமது விதியும் கட்டுப்படலாம் என்பதை இந்த உதாரணம் விளக்கவில்லை அல்லவா? சரி, ரமணர் அவரது உன்னத நிலையிலிருந்து நமக்கு என்ன அருளுகிறார் என்று பார்ப்போம். 
 
விதிமதி மூலம் விவேகம் இலார்க்கே
விதிமதி வெல்லும் விவாதம் - விதிமதிகட்கு
ஓர் முதலாம் தன்னை  உணர்ந்தார் அவை  தணந்தார்
சார்வரோ பின்னுமவை சாற்று
பொருள்விதி மதிகள் என்னும் இரண்டுக்கும் ஆதாரமாயுள்ள அகங்காரத்தின் உண்மையை அறியாத அஞ்ஞானிகளுக்கு விதியை மதி வெல்லுமா, மதியை விதி வெல்லுமா என்ற வாத விவாதங்கள் தோன்றும். விதி மதிகளாகிய இரண்டுக்கும் ஒரே அடிப்படையான அகந்தையின் ஆதார உண்மையாகிய தனது ஞான சொரூபத்தை உணர்ந்தவர் அந்த விதி மதியென்ற இரண்டையும் ஒழித்தவராவர். அவர்கள் மீண்டும் விதி மதிகளாகிய அவற்றைச் சார்ந்து பாதிக்கப்படுவார்களோ? சொல். 
ramanar3சாதாரணமாக விதி என்பதை ஈஸ்வர நியதி என்றும், மதி என்பது நமது முயற்சியால் ஆவது என்றும் சொல்வார்கள். சிலர் இரண்டுமே இறைவனின் சித்தப்படி நடக்கிறது என்று கொள்வர். மற்றவர்களோ மதி என்பதை நாம் நினைத்தபடி செய்வதால் அடைவது என்றும் அதற்குக் காரணம் நாமே என்றும் கொள்வர். ஆனால் தாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் சிலர் அது விதியின் சதி என்று அலுத்துக் கொள்வர். எப்படிப் பார்த்தாலும் விதி-மதி என்ற இரண்டுமே காரணம்-விளைவு (cause and effect) என்ற நியதிக்குள் கொண்டு வரப்படுவது என்று தெரிகிறது. அதாவது நாம் தற்போது நினைத்துச் செய்வதால் விளைவது என்றும் முன்னர் செய்த வினையால் விளைவது என்றும் இவைகளுக்கு காரண கர்த்தாவாக நாமோ, இறைவனோ இருக்கிறோம் என்றும் கொள்ளப்படுகிறது.
    கூர்ந்து கவனித்தால், விதி-மதி என்ற இரண்டுக்குமே மூலமாக நமது தேக-ஆத்ம பாவனையைத்தான் சொல்ல முடியும். ஏனென்றால் நாம் உடம்பு என்று கொள்ளும்போதுதான் நமக்கு ஆன்ம சிந்தனை வேண்டும் என்று தோன்றுகிறது. அப்போதுதான் மற்றவர்களை உள்ளடக்கிய உலகம் தெரிகிறது. அந்த நிலையில்தான் நமது முயற்சி, நமது செயல், அதன் விளைவுகள் என்றெல்லாம் தெரிகிறது. அங்குதான் விதியால் வந்தது, மதியால் விளைந்தது, விதி மதியை வெல்லுமா அல்லது மதி விதியை வசப்படுத்துகிறதா என்ற வாதங்களும் கிளைத்து எழுகின்றன.ஆக இவை அனைத்துக்கும் காரணமான “நான்” என்னும் அகந்தை என்ன என்று அதைத் தேடி அதன் மூலமான ஞான சொரூபத்தை உணர்ந்தவர்கள், விதி-மதி என்று ஏதும் தனியாக இல்லை என்றறிந்து அவை இரண்டையும் அழித்தவர்கள் ஆவர். அவர்கள் மறுபடியும் அவைகளைச் சார்ந்து அதனால் பாதிக்கப்படுவார்களோ என்று ரமணர் கேட்கிறார்.
              விதியா மதியா, அதுவா இதுவா என்றல்லாம் கேற்பது எது? "நான்" என்ற "அகந்தை".  அதை உணர்ந்த அருணகிரிநாதர் இவ்வாரு பாடுகிறார்,
      நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
      கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
     தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்


      தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
                                                                                                              -அருணகிரிநாதர்