தேடு

Tuesday, October 1, 2013

பிரபஞ்ச அறிவியல்(3)

சரி, நம்ம நிலாவுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தைப் பார்த்தோம், இப்போ இதை கொஞ்சம் சூரியன் வரைக்கும் எக்ஸ்டன்ட் பன்னுவோம், சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் சுமார் 15 கோடி கிலோ மீட்டர். இதை கொஞ்சம் பெருசா அனலைஸ் ப்ன்னுவோம்.




இனி வரும் அத்தனை postலையும் நாம் பயன்படுத்தப்போகு வாகனம்,
               
                     கார்      ; இன்னோவா
                     வேகம்:  நொடிக்கு (மணிக்கு அல்ல) 100 கிலோ மீட்டர்
              பெட்ரோல்:  சுரபி (எப்பவும் தீராது)
சரி நம்ம கார்ல இந்த  வேகத்துல போனா ( கோயம்புத்தூர்ல இருந்து சென்னை போக 5 செகண்ட் போதும்) சூரியனை அடைய எவ்வளவு நேரம் ஆகும், சின்னதா ஒரு கால்குலேசன்,

    நேரம் = தூரம் / வேகம்

   நேரம் = 150000000 (15 கோடி km) / 360000 ( 3 லட்சத்து 60 ஆயிரம் km per/hour)

சுமாரா ஒரு 416.6 மணிநேரம் ஆகும் (அதாவது 17 நாட்கள்)..பூ...இவ்வளவு தானா....கொஞ்சம் யோசிங்க நம்ம வைத்திறக்கிறது ஹைப்போத்திட்டிக்ல் கார் (அதாகப்ப்ட்டது,அப்படி ஒரு கார ந்ம்ம இன்னும்  கண்டுபுடிக்கள)..ஒரு வேளை நம்ம ஒரு சூப்பர் சானிக் Air Craft டை எடுத்துட்டு போனா எவ்வளவு நேரம் ஆகும், ஏனா நம்ம கிட்டத்தான் அது இருக்கே...எத்தனை நாள் வாடைகைகு கேற்க்கிறது நம்ம அரசாங்கத்துகிட்ட....

    நேரம் = 150000000 (அதே 15 கோடி) / 3600 (நொடிக்கு 1 கிமீ  (1 km/sec))

சுமார் 41666ம்ணிநேரம் ஆகும், அதாவது 1736 நாள், அப்படினா 4.7 வருசம். இது போரதுக்கு மட்டும், திரும்பி வர 4.7 ஆக மொத்தம் 10 வருசம் (சும்மா ஒரு ஆறு மாசம் எக்ஸ்ட்ரா)... 10 வருசம் வாடகைக்கு கிடைக்குமா?.ஆனா ஒளி வேகத்தில் போனா 8 நிமிசம் தான். இதை இன்னும் பிரமாண்டமா பார்க்கனும்னா, மனிதன் சாதாரனமா  5 km/hr வேகத்துல நடக்கிறான், அப்படினா அவ்ன் பிறந்ததில் இருந்து நடக்க ஆரம்பிச்சா சூரியனை அடைய எத்தனை வருசம் ஆகும்,

 நேரம் = 150000000/5

3 கோடி மணிநேரம் ஆகும்,அதாவது 3424 வருடங்கள் ஆகும்! நமக்கு இங்க இருந்து பார்த்தா சூரியன என்னமோ ஒரு சாப்பாட்டு தட்டு சைஸ் தான் இருக்கு, ஆனா அது உண்மையில எவ்வளவு பெருசுனா, அதுக்குள்ள 10 லட்சம் பூமியை போட்டு அமுக்கிடலாம் (கொஞ்சம் கண் மூடி உங்க மனத்திரையில் பாருங்க),அவ்வளவு பிரமாண்டம்


இந்த ரிங்குக்குள்ள ஒரு 100பூமியை போட்டுடலாம். இந்த ரிங்கோட சைஸ் சூரியனின் கோபத்தை பொருத்து மாருபடும். சரி இனி மற்ற கோள்களின் அல்லது நட்சத்திரத்தின் தூரத்தை ஒப்பிட நமக்கு கிலோ மீட்டர் ஸ்கேல் (km) ஒத்து வராது, அதுக்கு பதிலா அஸ்ட்ரானமிக்கல் யுனிட்டை (AU) தான் பயன்படுத்துவோம் (ஒரு சில போஸ்ட்(post) அப்புறம் இதுவும் மாறிடும்)...சரி ஒரு AU னா 15 கோடி கிலோ மீட்டர், அதாவது சூரியனுக்கும் நம்க்கும் உள்ள தூரம். 10 AU னா 10*15 கோடி km = 150 கோடி km,புரியுதா. கீழ உள்ள படத்தை பாருங்க, நம்ம பூமிக்கும் மற்ற கோள்களுக்கும், அடுத்த சூரியனுக்கும் (நட்சத்திரம்) உள்ள தூரம் AUல் உள்ளது, அதை கிலோமீட்டருக்கு மாத்திப் பாருங்க (கொஞ்சம் கண் மூடி ரசியுங்க)


by
அபி

Monday, September 9, 2013

பிரபஞ்ச அறிவியல்(2)

இந்த பூமியில தோராயமா 83 மில்லியன் ( 8 கோடியே 30பது லட்சம்) உயிரினம் இருக்காம் (அடேங்கப்பா!). அதுல ஒன்னு தான் மனிதர்கள், மானிட மக்கள் தொகை 730 கோடி! அப்படினா ஒவ்வொரு உயிரனத்தின் தொகையும் ( பறக்கறது,ஓட்ரது,நீந்துவது,ஊருவதுனு....) எவ்வளவு இருக்கும்னு கொஞ்சம் கண்ண மூடி யோசிங்க ( ஒரு நிமிசம், இதில பேக்டீரியா, வைரச கணக்குல எடுத்துக்க கூடாது...ங்க்..)..அது சரி இது எல்லா இங்க எதுக்கு (சும்மா ஒரு general knowledgeநு..)...இத்தனை உயிரனங்களையும், உயிர் அற்றவைகளையும் தூக்கிக்கிட்டு சுமார் 3.5 பில்லியன் வருசமா யாருகிட்டயும் கூலி வங்காம, எந்த எதிர் பார்ப்பும் இல்லாம, புருஷனான சூரியன பொண்டாட்டி மாதிரி நம்ம எல்லாத்தையும் வயித்துல சுமந்துக்கிட்டு சுத்தி சுத்தி வந்துக்கிடு இருக்கா இந்த பூமித் தாய்.

சரி, இந்த பூமியின் எடை,அளவு (all physical properties), எல்லாம் அதிக பேருக்கு தெரிந்திருக்கும்,(தெரியலனா ப்லீஸ் Visit: Wikipedia),ஆமா இதை எல்லாம் எப்படி அள்ந்திருப்பாங்க (இத்ற்கு பதில் நீங்களே தேடிக்குங்க, ஏனா எனக்குத்தெரியாது).


இந்த பூமி எங்க தொங்கிக்கிட்டிருக்கு? யாரவது Invisible கயிருனால கட்டித்தொங்க விட்டிருக்கலாம்? அந்த Invisible கயிருக்கு புவியீர்ப்புவிசைனு பேர் வைத்து நம்ம எல்லாத்தையும் ஏமாத்தலாம் ? இந்த பூமி மட்டும் தொங்குனா பிரச்சனை இல்லை, நிலா தொங்குது, சூரியன்,கோடான கோடி நட்ச்சத்திரம்,பால்வளி அண்டம், கோடான கோடி அண்டம், அப்படி இப்படினு எல்லாமே ஒரு இருட்டுக்குள்ள தொங்குது...சரி இதை எல்லாம் பின்னாடி ஒரு நாள் பார்ப்போம்.....


இப்போ நமக்கும் (பூமிக்கும்) நிலாவுக்கும் உள்ள தூரம் 3 லட்சம் கிலோ மீட்டர் (அந்த Apogee,perigee எல்லாம் இப்பவேண்டாம்). ஒரு வேளை நான் ஒரு டார்ச் லைட்ட எடுத்து (அது Laserநு வைத்துக்குவோம்) நிலா மேல அடித்த ரெண்டாவது நொடியில் நம்ம மேல அது அடிக்கும்..அதாவது நிலாவில பட்டு திரும்பி வந்து நம்ம மேல ப்டும் இதுக்கு ரெண்டு நொடி லைட்டுக்கு போதும் (மின்காந்த அலைகள்(EM Waves) எல்லாம் 3 லட்சம் கிலோ மீட்டரை ஒரு நொடியில கடந்திடும்: லைட்டு ஒரு மின்காந்த அலைதான்).

அப்படினா, ஒரு கார் லைட் வேகத்துல போனா இந்த பூமியை ஒரு நொடியல ஆறு முறை சுத்திடலாம்..ங்க்...ஒரு வேளை நம்ம நிலாவிலிருந்தா நமக்கு பூமி எப்படித்தெரியும்,


Earth Rise and Set 

by
~அபி

Tuesday, August 13, 2013

பிரபஞ்ச அறிவியல்(1)

மனிதனாக பிறந்த ஒவ்வருவருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த கேள்வி வந்திருக்கும்:

        கடவுள் யார்? நான் யார்? இந்த உலகம் என்ன?  (சத்தியமா இல்லைனு சொல்றீங்களா). நீங்க உங்களுக்கே தெரியாம இந்த கேள்வியை கேட்டிருப்பீங்க, உதாரணத்துக்கு உங்க குழந்தை பருவத்துல கேட்டிருக்கலாம்.  சரி அதுக்கும் ப்ரபஞ்ச அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிறீங்களா?  மேல கேட்ட கேள்விக்கு ரெண்டு பாதையில போய்தான் வழி தேடனும்,
Path 1:
     ஆன்மிகம் ,நீ இங்க இப்படி இருப்பதற்கு உன் முன்வினைப் பயன் தான் காரணம், கடவுள் சொர்கத்துல உக்காந்துகிட்டு இந்த பூலோகத்துல என்ன என்ன நடக்குதுனு மானிட்டர் செய்வார்...இந்த பிரபஞ்சத்தை பார்த்துக்க நிறைய தேவர்களை அசிஷ்டண்டா வைத்திருக்கிறார்...மக்கள் தொகைய குறைப்பதற்கு எமன எடுபடியா வைத்திருக்கார்.....இதை அப்படியே ஏத்துக்கிட்டும் போலாம்...இல்லைனா புலன்விசாரனையும் பன்னலாம் ( சொர்க்கம் எங்கிருக்கு..கடவுள் நம்மை படைத்தார்னா அவர யார் படைத்தா (whose(where) is his/her parents)....நிறையா தத்துவங்களை அனலைஸ் பன்னலாம்)

Path 2:
அறிவியல், எல்லா விளக்கத்திற்கும் ஒரு proof கொடுக்கும், எல்லாத்தையும் சோதனை செய்துதான் ஏத்துக்கும், நமக்கு ஒரு மன த்ருப்தி இருக்கும்.

ஆனா ரெண்டும் தேடருரது என்னமோ ஒரு கேள்விக்கான விடையத்தான், இந்த உலகத்தின் சொந்தக்காரர் யார்? யார் இந்த முழு பிரபஞ்சத்தை யும் கட்டி மேய்க்கிறது?  எதுக்க்கு கோடான கோடான கோடான கோடன கோடி நட்ச்சத்திரங்களில் ஒன்ன மட்டும் செலக்ட் பன்னி கரைக்டான தூரத்தில் வைத்து, 5 மில்லியன் வருடத்திற்கு அப்புறம், மனிதனை படைத்து (அதுவும் DIRECTA இல்ல பரிணாமத்தின் மூலமா)...அவனையே யார் படைத்தான்னு கேட்க்க வைக்கனும்?

இனி நாம் தேடுவும், நமது JOURNEY கீழ இருக்கிற இடத்துல இருந்து ஸ்டார்ட் பன்னுவோம்....

   
இந்த pictureல 6 pixel தமிழ்நடுனு வச்சுகிட்டா, ஒரு பிக்ஸல் கோயம்புத்தூர், அந்த பிக்ஸ்ல
1000 மா வெட்டுனா அதுல ஒன்னு நம்ம ஊரு,அதை ஒரு 100ரா வெட்டுனா அதுல ஒன்னு நம்ம
வீடு,அதை ஒரு 10தா வெட்டுனா அதுல ஒன்னு நான், அல்லது  நீங்க.

by
~அபி

Sunday, October 2, 2011

பகவான் விரும்புவது எது?

முக்தி... இதைத் தான் பலரும் விரும்புவர். அதாவது, பிறவி எடுத்து பல சுக-துக்கங்களை அனுபவித்து, பிறகு மரணமடைகின்றனர். "இது போன்ற பிறவியும், துன்பங்களும் வேண்டாம். பகவானே... எனக்கு முக்தியைக் கொடு...' என்று வேண்டுபவர்கள் உண்டு. 
மற்றும் சிலர், "பகவானே... எனக்கு மீண்டும் பிறவியைக் கொடுப்பதானால் கொடு; ஆனால், அது நல்ல பிறவியாக இருக்கட்டும். பகவானை வழிபட்டுக் கொண்டிருக்கும்படியான பிறவியைக் கொடு...' என்று தான் வேண்டுவர். இது, பக்தர்களின் விருப்பம். 


"அடுத்த பிறவியிலாவது நான் பணக்கார வீட்டில் பிறந்து, பணக்காரனாக இருக்க வேண்டும்...' என்று சிலர் வேண்டுவதும் உண்டு.
இப்படி வேண்டி பெறும் பிறவியில், அவன் உண்மையிலேயே அமைதியாக வாழ முடியுமா? பணம் படைத்தவர்களைக் கேட்டால் என்ன சொல்கின்றனர்? "பணமாவது, பொருளாவது சார்... மனசுலே அமைதியே கிடையாது. பணத்தைக் காப்பாற்ற எவ்வளவு பாடுபட வேண்டி உள்ளது. 


திருடர், கொள்ளையர் பயம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், நண்பர்கள், பந்து ஜனங்களின் தொந்தரவு...' என்கிறான்.
யாருக்காவாது ஏதாவது கொடுத்தால் அதுவே பிரச்னையாகி விடுகிறது. "அவனுக்கு அவ்வளவு கொடுத்தாயே... எனக்கு மட்டும் இவ்வளவுதானா?' என்று மனஸ்தாபம்.
சரி... இருக்கும் போது எல்லாரும் வந்து வாங்கிக் கொண்டு போகின்றனர். இவன் கொடுத்துக் கொடுத்தே ஏழையாகி போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும் என்ன சொல்கின்றனர்? "இருக்கும் போது கண் மண் தெரியாமல் செலவு செய்தான். இப்போ ஒன்றுமில்லாமல் திண்டாடுகிறான். இருக்கும் போது நிதானமாக இருக்க வேண்டாமா?' என்கின்றனர். 
இவனிடம் வாங்கிக் கொண்டு போனவர்களே கூட, "இவனை யார் இப்படி அள்ளி, அள்ளிக் கொடுக்கச் சொன்னது! அப்போதே இல்லை என்று சொல்லியிருக்கக் கூடாதோ...' என்கின்றனர்.


பணம் உள்ள போது, 10 பேர் வாசலில் வந்து நிற்பர்; பணம் இல்லாத போது, இவன் வீட்டு வாசல் வழியாகக் கூட போகப் பயப்படுவர். இவன் கொடுத்ததை மறந்து விடுவர்; இல்லை என்று சொன்னதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்வர்.
பணம் இருக்கும் போது பிறருக்கும் உதவி செய்; பகவானுக்கும் ஒரு பங்கு கொடு. மனிதர்கள் நீ கொடுத்ததை மறந்து விடுவது சகஜம்; 
ஆனால், பகவானுக்கு நீ சிறிதளவு செய்தாலும், அவன் மறக்க மாட்டான்; என்றும் ஞாபகம் வைத்துக் கொண்டு, நீ கொடுத்தை விட, பலமடங்கு திருப்பிக் கொடுத்து விடுவான். உன் பணம் அவனுக்குத் தேவையில்லை; உன் மனம் தான் அவனுக்குத் தேவை. மனமாற எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வான். சமயத்தில் திருப்பிக் கொடுப்பான்.


நன்றி:ஆன்மிகமலர்

Wednesday, August 31, 2011

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம்-ரமணர்



மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்னையே இங்குதான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் . நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள். ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும். உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.

Saturday, August 27, 2011

அர்த்தமுள்ள இந்துமதம்


பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:
ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி
நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.
அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.
அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.
அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.
நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது!
கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தும் நண்பர்களோடு சேர்ந்து விட்டாலோ, `இதல்லவோ வாழ்க்கை’ என்று தோன்றுகிறது.
எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.
அதனால்தான் நான் இப்போதெல்லாம் வேடிக்கை விளையாட்டுக் கூட்டத்தில் இருந்து விலகியே நிற்கிறேன்.
சார்ந்தால் மேதைகளைச் சாருகிறேன்; இல்லையேல் தனிமையை விரும்புகிறேன்.
லண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ், இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.
கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி, புத்தபிரானைச் சந்தித்ததும் ஞான தீட்சை பெற்று விட்டாள்.

மனிதனின் சேர்க்கையைப் பொறுத்தே மதிப்பு இதுவும் வள்ளுவன் சொன்னதே.
`உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் யோக்கியதை தீர்மானிக்கப்படும்’ என்பது வள்ளுவன் சொல்லே.

நல்ல கூட்டத்தில் சேர்ந்தால், எல்லாப் பொருள்களும் கிடைக்கும்.
திருடர்களுடனே சேர்ந்தால், நீ சிறைச்சாலைக்குத் தப்ப முடியாது திருடாவிட்டாலும் கூட.
நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல துன்பமும் இல்லை.
நல்லது.
இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?
அவனோடு ஒட்டாமலேயே பல நாட்கள் ஆராய்வது, ஆராய்ந்து தெளிந்த பின் உறவு கொள்வது.
ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.
மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது இருக்கும் புத்தி, மற்ற சகவாசங்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் இருக்க வேண்டும்.

Thursday, July 21, 2011

ஐன்ஸ்டைனும் ஆன்மீகமும்.

இவ்வுலகில் பல பேர் அறிவியலாளர் என்றாலே அவர்களுக்கும் ஆன்மீகத்துக்கும் சுத்தமாக சம்பந்தம் இருக்காது என்றே எண்ணுவார்கள். என்னைப் பொருத்தவரைஅறிவியலும் ஆன்மீகமும் ஒன்றே, இரண்டும் தேடுவது ஒன்றைத்தான், இப்படைப்பின் ரகசியம் என்ன?. அனைத்து ஆன்மீகக் கருத்துக்களும் விவாதத்துக்கு உட்படுத்தப் பவேண்டும் (நான் சொல்லலீங்க, விவேகானந்தர் சொன்னார்.) எது அனைத்துக்கும் சரியாக மனம் ஏற்றுக்கொள்ளும் படி பதில் தருகிறதோ அதுவே உண்மையான மதம் (இதையும் அவர்தாங்க சொன்னாரு). சரி ஐன்ஸ்டைன் மதத்தைப் பற்றி என்ன சொல்றார், இதோ பார்ப்போம்,


ஐன்ஸ்டைன் மதம், கடவுளைப் பற்றிக் கூறுவது இதுதான் : “நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி தாழ்மையுடன் மெய்ப்பாடு ஞானத்தைத் தெளிவு படுத்தும் ஓர் உன்னத தெய்வீகத்தை மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரமாண்டமான பிரபஞ்சத்தை உருவாக்கிய மாபெரும் ஒர் ஒளிமயமான மூலசக்தி எங்கும் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான் என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது.”


பிராணன் எங்கும் நிறைந்த வெளிப்படு சக்தியாக இருக்கிறது. …இந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கிற, நாம் சக்தி என்று அழைக்கிற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவது அனைத்தும் பிராணனே. உடல் இயக்கங்களாக, எண்ண சக்தியாக, நாடி ஓட்டங்களாக வெளிப்படுவதெல்லாம் பிராணனே. எண்ணம் முதல் மிகச்சாதாரண சக்தியாக இருப்பவை அனைத்தும் பிராணனின் வெளிப்பாடுகளே.”
                                                                                                                                      -சுவாமி விவேகானந்தர்
"சக்தியே சிருஷ்டியின் அடிப்படை விசை என நான் கருதுகிறேன். என் நண்பர் பெர்குஸன் அதனை எலன் வைட்டால் (elan vital) என அழைக்கிறார். ஹிந்துக்கள் அதனை பிராணன் என்கிறார்கள்.”                                                                                                                                      -ஐன்ஸ்டைன்